Saturday, January 15, 2011

இரண்டு தற்கொலை (அ) ஒரு கொலை





சந்தேகத்தினடிப்படையில் கைது
தீர்ப்புக்கு காத்துக்கொண்டிருக்கிறது
சிறையில் அடைக்கப்பட்டவரின்
குடும்பம்,
குற்றத்தை நிரூபிக்க சாட்சிகளை
தயாரித்துக்கொண்டிருக்கிறது
காவல்துறை,
சிறையில் அடைக்கப்பட்டவர்
அழுதுகொண்டிருக்கிறார் இயலாமையில்,
சிறையில் அடைக்கப்பட்டவரின் மகன்
நடந்துகொள்ளவேண்டியிருந்தது
இயல்பைவிட பணிவாய்,
சிறையில் அடைக்கப்பட்டவரின் மனைவி
சிரிக்கமுடிந்ததோ கனவில்மட்டும்,
குற்றம் நிரூபிக்கப்பட்டால்
இரண்டு தற்கொலை
வெளியே,
குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால்
ஒரு கொலை
உள்ளே.

Saturday, January 8, 2011

நாங்கள்

நீள அகலங்களால் நிர்ணயிக்கப்பட்ட
கண்ணாடி கடலுக்குள்
நீந்த அனுமத்திருக்கிறோம்
மீன்களை

சன்னல் வழி நுழைந்து 
கதவுவழி வெளியேறும்
சிட்டுக்குருவிக்கு 
நெல்லும் தண்ணீரும்
வைத்திருக்கிறோம்

மீன்குழம்பு உண்கையில்
முள்ளோடு கொஞ்சம்
சோறும்தந்துதிருக்கிறோம்
பூனை ஒன்றுக்கு

தெருவில் அலைந்துகொண்டிருந்த
குட்டிகளிலேயே அழகாய் இருந்த 
ஆண்நாய்குட்டியை
வளர்த்திருக்கிறோம்
மரத்தடியில் கோணிபோட்டு

பிர்ட்ஜிற்குள் தேங்கிக்கிடக்கும் 
பழையதில் பழை..யதை
கழுநீரோடு கலந்து 
கொடுத்திருக்கிறோம்
வாசலில் வந்துநிற்கும்
பசுவிற்கு

அம்மாவாசை தவறாமல்
அன்னம் வைத்திருக்கிறோம்
காக்கைக்கு

இப்படியும்,
இன்னும் சிலவாயும்
எங்கள் ஜீவகாருண்யம்.

Welcome to the blog world

Hi All this is my first post for the blog...


Regards,
C.R. Murali Krishnan