சந்தேகத்தினடிப்படையில் கைது
தீர்ப்புக்கு காத்துக்கொண்டிருக்கிறது
சிறையில் அடைக்கப்பட்டவரின்
குடும்பம்,
குற்றத்தை நிரூபிக்க சாட்சிகளை
தயாரித்துக்கொண்டிருக்கிறது
காவல்துறை,
சிறையில் அடைக்கப்பட்டவர்
அழுதுகொண்டிருக்கிறார் இயலாமையில்,
சிறையில் அடைக்கப்பட்டவரின் மகன்
நடந்துகொள்ளவேண்டியிருந்தது
இயல்பைவிட பணிவாய்,
சிறையில் அடைக்கப்பட்டவரின் மனைவி
சிரிக்கமுடிந்ததோ கனவில்மட்டும்,
குற்றம் நிரூபிக்கப்பட்டால்
இரண்டு தற்கொலை
வெளியே,
குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால்
ஒரு கொலை
உள்ளே.