Saturday, January 8, 2011

நாங்கள்

நீள அகலங்களால் நிர்ணயிக்கப்பட்ட
கண்ணாடி கடலுக்குள்
நீந்த அனுமத்திருக்கிறோம்
மீன்களை

சன்னல் வழி நுழைந்து 
கதவுவழி வெளியேறும்
சிட்டுக்குருவிக்கு 
நெல்லும் தண்ணீரும்
வைத்திருக்கிறோம்

மீன்குழம்பு உண்கையில்
முள்ளோடு கொஞ்சம்
சோறும்தந்துதிருக்கிறோம்
பூனை ஒன்றுக்கு

தெருவில் அலைந்துகொண்டிருந்த
குட்டிகளிலேயே அழகாய் இருந்த 
ஆண்நாய்குட்டியை
வளர்த்திருக்கிறோம்
மரத்தடியில் கோணிபோட்டு

பிர்ட்ஜிற்குள் தேங்கிக்கிடக்கும் 
பழையதில் பழை..யதை
கழுநீரோடு கலந்து 
கொடுத்திருக்கிறோம்
வாசலில் வந்துநிற்கும்
பசுவிற்கு

அம்மாவாசை தவறாமல்
அன்னம் வைத்திருக்கிறோம்
காக்கைக்கு

இப்படியும்,
இன்னும் சிலவாயும்
எங்கள் ஜீவகாருண்யம்.

1 comment:

Valmeegy said...

பாத்துக்குங்க மக்களே கவுஜ எழுத ஆரம்பிசிடாராம்

Post a Comment